Tuesday, July 15, 2014

தமிழின் தொன்மை மரபுகளும் ஆளுமைகளும் 2


விஜய் (Potery Stone Vijay)
 
திவாகர் அய்யா முதல் மடலிலேயே விஜயை அறிமுகம் செய்திருந்தார், அவரின் இணையம் பார்த்து இருக்கேன், சில கட்டுரைகளும் படித்திருக்கிறேன், சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவரிடம் நிறைய பேச / கேட்க வேண்டும் என்று இருந்தேன்.

--

ஒரு வார விடுமுறையில் அதிகாலையில் ரீச் பவுண்டேசன் சார்பில்  கல்வெட்டுகளை பற்றி படிக்கும் மாணவர்களுக்கு ஒரு ஸ்டடி டூர் சென்ற போது கிண்டியில் அவர்கள் வந்த வேனில் ஏறினேன், எல்லோர்க்கும் ஹாய் சொல்லிவிட்டு காலியான இருக்கையில் அமர்ந்தேன், மேலும் சிலர் ஏறினர், கடைசி சீட்டின் மறு கோடியில் ஒருவர் அமர்ந்தார், அவர்க்கும் கை கொடுத்துவிட்டு, உறங்க சென்றேன், என் கடைசி சீட்டில் இருப்பவர் வந்தவர்களிடம் பேசி கொண்டு இருந்தார், தூக்க கலக்கத்தில் இருந்த என்னை அப்போது சந்திரா அய்யா என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி கொண்டிருந்தார், அவர் என்ன சொல்லி கொண்டிருந்தார் என்பதை முழுதும் காதில் விழவில்லை,  என்னை எழுப்பி கடைசி சீட்டு நபர் அவர் கார்ட் தந்தார் வாங்கி பார்த்தேன் Poetry in Stone விஜய். (http://poetryinstone.in/)

இருந்த தூக்கம் கலைந்து விட்டது.

இன்ப அதிர்ச்சி, வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்றிருந்த நபர், என்னை என் கலை ஆய்வு பயணங்களுக்கு தயார் செய்யவும்,, அங்கு காணும் சிற்பங்கள் குறித்த விவரங்களை உய்வதற்கும், புதிய விவரங்களை சேர்க்கும் ஆர்வம் தூண்டுவதாகவும் இவரின் இணையம் எனக்கு எவ்வளவோ உதவியாக இருந்திருக்கிறது. இருவரின் சுய அறிமுகத்துக்கு பின், என் தேடலையும் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

எங்கே போறோம்னு என்று தெரியாமல் தான்  வண்டி ஏறினேன், பேச்சு சுவராஸ்யத்தில் பாதையை கூட அறியவில்லை, செய்யூர் பக்கம் குறத்திமேடு சமணமலையில் இறக்கிவிட்டார்கள். இந்த மாதம் ஏதும் மலை ஏறவில்லையே என நினைத்து கொண்டிருந்த எனக்கு தானாகவே வாய்ப்பு கிடைத்தது.

மலை ஏறும் போது ஒவ்வொரு இடமாக விளக்கி எப்படி, எவ்வாறு, எங்கனம், சிற்பங்களின் காலம், எந்த மன்னர், அதன் வரலாறு என ஒவ்வொன்ன்றையும் விளக்கினார். ஆர்வத்தில் மேலேறி கொண்டிருந்த என்னை பொறுமையாக கைபிடித்து மேலேற்றி, ஒரு நண்பனாக, சகோதரனாக, குருவாக என் சந்தேகங்கள் அனைத்திருக்கும் பொறுமையாக பதிலளித்து கொண்டிருந்தார்.

அவரின் தேடல்களைபற்றி சொன்ன போது சில விடயங்கள் மிகைப்படுத்தி சொன்னது போல் தெரிந்தது, சிற்பத்துக்கு போய் இவ்வளவு மெனகேடுவார்களா என எனக்குள் யோசித்தேன், பிரியும் வேலையில் மறுநாள் திருக்கழுக்குன்றம் செல்வதாகவும் முடிந்தால் நீயும் வா என்றார்,

மறுநாள் அதிகாலையில் குறுஞ்செய்தி அனுப்பியவுடன் உடனே நான் தயார் என பதில் வந்தது, அவசர அவசரமாக கிளம்பி அவரை சந்தித்து முதலில் மகாபலிபுரம் புலிகுகை சென்றோம் அங்கு ஒவ்வொரு சிற்பங்களை பற்றி விளக்கினார், இதன் வரலாறு, இதன் புத்தக்கம், ஆங்கிலேயேர்களின் பங்கு, நம்மக்களின் அறியாமை என ஒவ்வொன்றாக விளக்கிவிட்டு, மகாபலிபுரம் சென்று அவர் நண்பர் ஒருவரை சந்தித்து  அவர் முலம் திருக்கழுக்குன்றம் சென்றோம், கருவறை சுவற்றின் பின்னால் உள்ள சோமஸ்கந்தர் சிற்பங்களை காமித்து விளக்கினார், அவர் வெகு நாட்களாக தேடி கொண்டிருந்த சிற்பம் அது,  பார்த்ததும் அவர் முகத்தில் திருப்தி இருந்தது. இதன் பிண்ணனி, மலையின் வரலாறு, கீழே உள்ள குகையில் டச்சுகாரர்களின் வருகை பதிவேடு ஒவ்வொன்றாக விளக்கினார். வந்த நோக்கம் அந்த சிலை மட்டுமானதாக இருந்தது.

மனிதர் ஒரு சிலைக்கே இவ்வளவு கஷ்டபடுபவர் என்றால், இது வரை அவர் இணையத்தில் சேமித்திருக்கும் சேகரிப்பை நினைத்தால் அவ்வளவு பிரம்பிப்பாக இருக்கும்.

"இவரின் முயற்சி கலை ஆர்வத்தை தூண்டும் முயற்சி. இவரின் இணையத்தை வாசித்துவிட்டு அடுத்த முறை நீங்கள் அந்த இடங்களுக்கு செல்லும் பொது சில நிமிடங்கள் இந்த அறிய சிற்பங்களை ரசிக்க செலவிடுவீர்கள்."

கோவில், சிற்பங்கள் அவைகளின் பெயர்கள் உருவாக்கிய காலங்கள் அதன் வரலாறு என அவர் இணையத்தில் தொகுத்து வைத்துள்ளார், சிற்ப்பக்கலைகளுக்கான டேட்டாபேஸ் என்றால் மிகையாகது.

மேலும் அவரை பற்றி தெரிந்து கொள்ள.
http://poetryinstone.in/lang/ta/about-us-2

அவரின் இணையம்:
http://poetryinstone.in/

1 comment:

  1. A lovely note on your Guru! Vijay and his blog posts, have definitely encouraged many others to dwell deeper into the sculptures... Including yours faithfully!

    ReplyDelete