Monday, July 7, 2014

தமிழின் தொன்மை மரபுகளும் ஆளுமைகளும் 1


திவாகர்
கடல்புறாவில் வரும் கப்பல்களை 3D மாடலாக செய்ய வேண்டும் என்ற ஆசையை ஒரு நிகழ்வில் உமாநாத் அண்ணனிடம் சொல்லி இருந்தேன், அவரும் மனதில் கொண்டு அச்சமயம் வெளிவந்திருந்த எஸ் எம் எஸ் எம்டன் புதினத்தில் வரும் கப்பலை குறிப்பிட்டு திவாகர் அய்யாவை அறிமுகப்படுத்தி மடல் அனுப்பினார். வரலாற்று ஆசிரியர்களுடனான நேரடி மடல் இதுவே. ஆர்வக்கோளாறன எனக்கு முதல் மடலிலேயே சரியான வழிகாட்டியும், கப்பல்கள் சம்பந்தப்பட்டவைகளையும் அதன் சார்ந்த நிபுணர்களையும் அறிமுகப்படுத்தினார். எனக்கு முகவரி தந்தவர்.

----------
தமிழில் வரலாற்றுப் புதினங்கள் என்று சொன்னால் அவை சோழர் காலத்திலும் பல்லவர் காலத்திலும் முடங்கிக் கிடந்த காலங்களில் வரலாற்று நாவல்களுக்குப் புதிய தளங்களைத் தேடியடைந்தவர்களில் திவாகர் அய்யாவும் ஒருவர்.
எஸ்.எம்.எஸ் எம்டன் என்பது  ஜெர்மானியக் கப்பல் நிபுணர்களால் கட்டப்பட்ட ஒரு போர்க் கப்பல், 1914 செப்டம்பர் 22 செவ்வாய் இரவு 9.30 மணிக்கு 'எம்டன்' சென்னைக் கடற்கரையை தனது பீரங்கிக் குண்டுகளை ஏவியது. எம்டனிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்திற்கு வெளியே நின்றிருந்த பிரிட்டிஷ் கப்பல், ஆங்கிலேயருக்குச் சொந்தமான 'பர்மா ஷெல் ஆயில் டாங்குகள்', சென்னை உயர்நீதி மன்றம், 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை' போன்றவற்றில் 130 குண்டுகளை வீசிவிட்டு, உடனே திரும்பிவிட்டது. இந்தப் பின்வாங்கலுக்கு காரணம் ஒரு இந்தியராக இருக்கலாம் என்ற ஊகத்தை வைத்து இப்புதினம் உருவாக்கப்பட்டது.

முதலாம் உலகப் போர் நடந்த அந்த காலகட்டங்களையும்,
இரண்டு வெவ்வேறு காலத்து சரித்திரங்கள் பிற்காலத்து மாந்தர்களின் கதையால் பிணைக்கப்பட்டு, சரித்திரப் பின்னணி, பக்திப் பின்னணியுடன்,  இந்து ஆகம விதிமுறைகளும், சிவாச்சாரியார்களின் ராஜபக்தியும், படிப்பவரை ஆச்சரியத்தில் திளைக்க வைக்கின்ற வரலாற்றுத் தகவல்களுக்குரிய சான்றுகளும் குறிப்புதவிகளையும் தெளிவாக குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். அந்த வரலாற்று நிகழ்வுகளை வைத்துக் கொண்டு அவர் பின்னியிருக்கின்ற நுணுக்கமான கதைக்காகவே மீண்டும் ஒரு முறை வாசிக்கலாம்.
இந்த புத்தகத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள :
முதல் நாவலான ”வம்சதாரா” விசாகப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட 900 ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட இரண்டு தமிழ் கல்வெட்டுகளின் ஆதாரத்தின் மீது எழுதப்பட்ட வரலாற்று நாவல்.

வம்சதாரா, திருமலைத் திருடன், விசித்திர சித்தன், எஸ்.எம்.எஸ் எம்டன் 22-09-1914 என சரித்திர நாவல்களும், கட்டுரைகள், சிறுகதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்புகளில் புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.

தேவாரம், திருவாசகம் உள்ளடக்கிய திருமுறைப்பாடல்களைத் தெலுங்கு மொழியில் கொண்டுவரும் திருமலை-திருப்பதி தேவஸ்தான திட்டத்துக்குப் பொறுப்பாளராக உள்ளார்.

விஜயவாடாவில் கப்பல் போக்குவரத்து சம்பந்தமாக பணி புரிகிறார்.  எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், ஒருங்கிணப்பாளர், விசாகப்பட்டின தமிழ்மன்ற செயலாளர் பன்முக வித்தகர்.

திவாகர் அய்யாவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள : http://ta.wikipedia.org/s/9vs
வலைப்பூக்கள் :
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
மின் அஞ்சல் முகவரி : venkdhivakar@gmail.com

No comments:

Post a Comment