Thursday, February 21, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 5 : கரடிப்பட்டி

ஐந்துதலை நாகத்துடன் பெருமாள்.
 பெருமாள் கோவிலின் கற்சுவர்.


 எதிரே நடுவில் தெரியும் மலை கீழக்குயில்குடி
 மலையின் மேல் ஒரு குட்டை (சுரண்டியது)
சுரண்டியனுக்கு எதோ தோன்றி இருக்க வேண்டும். ஒரு கல்லை மட்டும் விட்டு வைத்திருக்கிறான்.
 


மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 4 : கரடிப்பட்டி


இது வரை மலையில் உள்ள புடைப்புசிற்பம், சமணப்படுக்கை பார்த்தோம் அடுத்து மலை ஏறி சுற்றி பார்ப்போம்.

சமணக்குகை அருகிலேயே பாறை இடுக்கில் இருந்த சரிவில் இருந்த குகை போன்ற அமைப்பு
 அங்கிருந்த கல் சவப்பெட்டி போன்ற டிசைனில்
 இயறகையும் அழகான சிற்பி தான் போல
 இந்த பாறை இடுக்கின் உள்ள பெரிய மரத்தின் அடியில் இரு பாறைகளுக்கு இடையில் குறுகலான ஆனால் நீண்ட குகை போல் அமைந்திருந்தது,
 மலையின் மேல் நடுவே

 மலையையே தொட்டி போல் சுரண்டி இருக்கின்றனர்.
 கிழக்கு திசை நோக்கி செல்லும் போது இருந்த குகை.
குவாரி வேலை செய்பவர்களுக்காக சாப்பாடு செய்ய உபயோகித்திருக்கிறார்கள் போல.

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : கரடிப்பட்டி


குகையின் மேலிருந்த சிலைகள்
 அசோக மரத்தின் கீழ் மகாவீரர், சாமரம் வீசுபவர்கள், கீழே 3 சிங்கம்
 அங்கிருந்த வட்டெழுத்து
 பிராமி எழுத்து

சைய்அளன் விந்தைஊர் கவிய்
 
கவி என்றால் குகையைக் குறிக்கும். ளகர மெய் சேர்த்து அள்ளன் என படிக்க வேண்டும்  விந்தையூர் சையள்ளன் என்பான் அமைத்த குகைத் தளம் என்பது கல்வெட்டின பொருள். (நன்றி சேசாத்திரி அய்யா)

 உட்கார்வதற்க்கு வசதியான இருப்பிடம்

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 2 : கரடிப்பட்டி


சமணர் படுக்கை சமமான தளமாக இல்லை, மேலும் பாதி தான் இருக்கிறது.
 



 குகையின் அடிவாரம்
 மகாவீரர் சிலை
 மகாவீரர் சிலையிம் படுக்கைகளும்
 மகாவிரர் சிலையின் சிதைந்த பகுதி
மூன்று சிங்கத்தின் மேல் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்திருக்கும் மகாவீரர், இருபுறமும் கீழே சிறிய யாளி, அதற்க்கும் மேல் சாமரம் வீசுபவர்கள்.

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : கரடிப்பட்டி

இந்த முறை மதுரைக்கு கிளம்பும் போது கொங்கர் புளியங்குளம் தான் என் திட்டத்தில் இருந்தது, நண்பர்கள் சிலரிடம் விசாரித்த போது பகலில் செல்வது நல்லது அதிகாலை கொஞ்சம் ரிஸ்க், என சொல்லி இருந்தனர்.

அதிகாலை எழுந்து கிளம்பும் போது ஸ்கூட்டியில் அவ்வளவு தூரம் செல்ல முடியுமா, வண்டியின் நிலைமை வேறு சரியில்லை ஒரே யோசனையுடன் நாகமலை புதுக்கோட்டை வரை வந்துவிட்டேன், தேநீர் அருந்தலாம் என கடையில் நிறுத்தி கடைக்காரரிடம் பாதை, நிலவரம் விசாரித்தேன், அருகிலேயே ஒரு மலை இருக்கு அங்கு சென்றீர்களா என்றார், கீழக்குயில்குடியா என்ற போது இல்லை இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் இடப்புறம் திரும்பும் சாலையில் கண்மாய் ஒட்டி பயணிக்க வேண்டும் என்றார், சரி இதற்கே முயற்சிக்கலாம் என சென்று விட்டேன்.

------------------
மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு எதிரில் உள்ள கரடிப்பட்டி / முத்துப்பட்டி மலை, மதுரைக்காமராசர் பல்கலைக்கழகக் குடியிருப்புகளுக்கு எதிரே இருந்த சிறுபாதையில் இரயில் தண்டவாள தடம் தாண்டி சென்றதும் எதிரே சிறு சிறு குடியிருப்புகள், அங்கு விசாரித்து ஒத்தையடி பாதையை கண்டுபிடித்து ஒரு காலத்தில் மலையாக இருந்த இடத்தை பள்ளமாக்கி குட்டை போல் செய்திருந்ததை அதை சுற்றி வந்ததும் அங்கும் சில குடியிருப்புகள் ஆனால் முற்றிலும் வேறாக வெறும் குடிசைகளாக இருந்தன, வெளிப்புற மண் சுவர்களில் சாணம் பூசி கூரைகள் சுவரின் உயரத்தை விட ஒன்றரை மடங்கு உயரத்தில் பிரமிடு போல் காட்சி அளித்தன, அந்த இடம் முழுதுமே சாணம் தெளித்து மஞ்சளும் பச்சையும் கலந்த வெளுப்பில் இருந்தன, ஒரு பக்கம் கால்வாயும், மறு பக்கம் மரங்கள் சூழ்ந்த்தும் அந்த இடமே நகர வாசனை காணாதது போல், கால இயந்திரத்தில் சில நூறு வருடம் பின்னோக்கி சென்றது போல இருந்தது. படம் எடுக்க வேண்டும் என்று எண்ணத்தை விட இதை ரசிக்கும் எண்ணமே மேலோங்கி இருந்தது,

கிராமத்தை கடந்து மலை பாதையை அடையும் போது  ஒற்றையடி பாதையாக மாறியது, வாத்து கூட்டம் வழிவிட மாடுகள் வழிகாட்ட நாய்கள் படை சூழ பறவைகள் வரவேற்க்க மலையின் அடிவாரத்தை அடைந்தேன்.

கரடிப்பட்டி மலை
 சில வருடம் முன் அந்நாந்து பார்த்த மலைகள் இப்ப குனிந்து பார்க்க வேண்டிய நிலைமை
ஒற்றையடி பாதை
 மலையை சுரண்டியவன் ஒரு சிறந்த ரசிகன் போல,

 மலை ஏறும் பாதை
 பாறையின் அடிவாரத்தில் தான் இருக்கிறது சமண படுக்கை


மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 6 : திருப்பரங்குன்றம்


இரண்டாம் குகையின் மேலேயே அமைந்திருந்த மற்றோரு குகை
கீழே தெரியும் சமணபடுக்கைக்கு நேர் எதிரே தெரிவது சிறு அறை போன்ற அமைப்புள்ள குகை இயற்கையாக அமைந்தது போல் இல்லை, வலப்புறம் இருப்பது அந்த அறைக்கான ஜன்னல் வசதி
 சமணபடுக்கைகள்

 அந்த சிறு அறை போன்ற குகை
 வலப்புறம் வெளிச்சம் வருவதற்க்கான பாதை

 இடப்புறம் சிறு சிறு ஒட்டை அலமாரி மாதிரியாக இருந்தது
  அங்கிருந்த கல்வெட்டு
 குகையின் நுழைவாயில்

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 5 : திருப்பரங்குன்றம்


மலையின் மேல் இருக்கும் மற்றொரு குகைக்கு செல்லும் பாதை
 மலையின் மடிப்பில் அமைந்திருந்த குகை
 குகையில் இருந்த சுனை வலப்புறம் படுகை
 சுனை மேலிருந்து
 4 பேர் படுக்கும் வசதியுள்ள படுக்கைகள்
 படுக்கையின் மேல் பிராமி எழுத்து
2ம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி எழுத்துக்கள்