Wednesday, June 11, 2014

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 2 : குடியம் குகை


குகையை நோக்கி எங்களது பயணத்தில் ஒற்றையடி பாதை காட்டுக்குள் செல்ல யாரும் முந்தி கொண்டு செல்ல இயலாது, நடக்க முடியாதவர்களையும் வேகமாக நடப்பவர்களையும் ஒன்றைணைத்து அழைத்து செல்ல வேண்டி இருந்தது, இதமான காற்று மற்றும் எங்கோ குருவிகளின் சத்தம் மட்டும் கேட்டது. உயரமான புதர்கள் நிறைந்த காடாக இருக்கிறது. பரிச்சயமான மரங்கள் எதுவும் காணப்படவில்லை. ஆங்காங்கே சில சப்பாத்தி கள்ளிச்செடிகள் தென்பட்டன.

பாதி கடந்த நிலையில் நான்கு புறமும் சிறிய பெரிய குன்றுகளுக்கு இடையில் நின்று கொண்டிருப்பது புலப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்திருப்போம்.

இடப்பக்கம் ஒரு குன்றின் மேல் கடலை உருண்டையில் ஒட்டி கொண்டிருக்கும் கடலை போல கற்கள் ஒட்டி கொண்டிருந்தது ஆரவத்தில் அந்த குன்றை நோக்கி ஏறினேன்.










No comments:

Post a Comment